நவீனக் கலைகள்

          தமிழகம் ஒரு நீண்ட ஓவிய மரபைக் கொண்டுள்ளது. வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் அடர்ந்த வனத்துக்குள் இருந்த குகை மற்றும் பாறை ஒதுக்குகளில் வரையத் துவங்கிய ஓவிய மரபு தொடர்ந்து பாண்டியர், பல்லவர், சோழர், விஜயநகர – நாயக்கர் , மராத்தியர், சேதுபதிகள், தொண்டைமான்கள் போன்ற மன்னர்களாலும் ஆதரவளிக்கப்பட்டு வந்தது. இதற்குச் சாட்சியாக அவர்கள் காலத்தில் கோயில்கள் மற்றும் அரண்மனைகளில் எஞ்சியிருக்கும் ஓவியங்கள் இன்றளவும் காணக்கிடைக்கின்றது. பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து அரசியல் குழப்பம் மற்றும் மாற்றத்தினால் பாரம்பரிய கலை மரபுகள் ஆதரவின்றி நலிந்தன. அதே சமயம் மேற்கத்திய கலை மரபு நமது ஓவியர்களால் ஈர்க்கப்பட்டுப் புதிய மாற்றங்கள் நிகழ்ந்தன...


மேலும் படிக்க