சங்ககாலம்

          தமிழ் மக்கள் சுமார் 2000 ஆண்டுகளாகவே (சங்க காலத்திலிருந்தே) காசை உபயோகித்திருக்கிறார்கள். காசு என்றும், காணம் என்றும், பொன் என்றும், கழஞ்சு என்றும் பெயர் வழங்கியிருக்கிறார்கள். சேர மன்னர்கள் புலவர்களைப் போற்றி அவர்களுக்குப் பொற் காசுகள் கொடுத்தார்கள். நார்முடிச்சேரல் என்பவன் காப்பியனாருக்கு நாற்பத்து நூறாயிரம் 'பொன்" பரிசு கொடுத்தான். ஆடு கோட்பாட்டு சேரலாதன் நச்செள்ளையாருக்கு ஒன்பது 'கா' பொன்னும் நூறாயிரம் காணமும் பரிசு கொடுத்தான். செல்வக் கடுங்கோ என்ற சேரன் கபிலருக்கு நூறாயிரம் காணம் பரிசு கொடுத்தான். பல காசுகளைக் கோர்த்து சங்க கால மக்கள் அணிகள் செய்து மகிழ்ந்தனர்.

       ...


மேலும் படிக்க