சோழர்

          சங்ககாலத்திற்குப் பின்னர் கி.பி. 850-இல் விஜயாலயன் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சோழ அரசை மறுமலர்ச்சி பெறச் செய்தான். அவனுக்குப் பின் ஆதித்தன், பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன் முதலிய சோழ மன்னர்கள் ஆண்டிருக்கின்றனர். ஆயினும் அவர்கள் காலத்திய காசுகள் இது வரை கிடைக்கவில்லை. சோழப் பேரரசர்களில் உத்தம சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட காசுகள் தான் இதுவரையில் கிடைத்துள்ள காசுகளில் பழமையானவையாகும்.   அக்காசுகள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களாலானவை. அவற்றில் மூன்று வகைக் காசுகள் உள்ளன. முதல் வகைக் காசின் முன்புறத்தில் புலி, இரு மீன்கள், வில் ஆகிய மூன்று இலச்சினைகளையும் பின்புறத்தில் உத்தம சோழன் என்ற நாகரி எழுத்துக்கள...


மேலும் படிக்க