அகழாய்வுகள்

          மண்ணில் புதையுண்டு காணப்படும் தொல்லியல் சான்றுகளையும், அவை கிடைக்கும் சூழல்களையும் அறிவியல் பூர்வமாக அகழ்ந்து (தோண்டி), முறையாகப் பதிவுசெய்து சேகரித்து பகுப்பாய்வு செய்வது அகழாய்வாகும். பண்பாட்டு எச்சங்களை வகைப்படுத்தி அறிவியல் முறையில் ஆய்தலாகிய அகழாய்வு தொல்லியல் வரலாற்றின் ஒரு முக்கியப் பிரிவாகும்.

          அகழாய்வு மக்கள் வாழ்ந்த பகுதி (Habitation sites), ஈமச்சின்னங்கள் அமைந்த பகுதி (Burial sites) ஆகிய இருவிடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் வாழ்ந்த பகுதி என்பது அரண்மனை, ஊர், கோயில், கோட்டை, ஆற்றங்கரையோரங்கள், கடற்கரை பட்டினம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றினை அகழாய்வுக்கு உட்படுத்தி வரலாறு அறிதல் ஒரு முறையாகும்....

மேலும் படிக்க