கற்சிற்பங்கள்

          தமிழகத்தில் கி.பி. 5, 6-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கல்லாலான சிற்பங்கள் ஏதும் இதுகாறும் கிடைக்கவில்லை. ஒரு சில நடுகற்கள் கி.பி. 5, 6-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அவற்றில் இறந்துபட்ட வீரனின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றையே பண்டைய சிற்பங்களாகக் கூறலாம். இதற்கடுத்துப் பல்லவர் காலத்திலிருந்துதான் கற்சிற்பங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. பல்லவர்காலச் சிற்பங்கள் இரு வகைப்படும். பாறைகளிலேயே செதுக்கப்பட்ட சிற்பங்கள் என்றும், கட்டடங்களை அழகு செய்யும் சிற்பங்கள் என்றும் இரு வகைப்படும். இவற்றில் பாறையைச் செதுக்கிக் குடைவரைக் கோயில்களாகவும், ஒற்றைக் கற்கோயில்களாகவும் அமைந்தவற்றில் பாறைச் சிற்பங்களைக் காணர்கிறோம். இவற்றில் ...


மேலும் படிக்க