கீழச்சொக்கையா கோயில்

அமைவிடம் - கீழச்சொக்கையா கோயில்
ஊர் - முந்தல்
வட்டம் - போடிநாயக்கனூர்
மாவட்டம் - தேனி
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2018
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

பேராசிரியர்கள் மாணிக்கராஜ், கனகராஜ்

விளக்கம் -

தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்தில் உள்ள முந்தல் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள கீழச்சொக்கையா கோயில் அருகே பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வூரில் கற்திட்டைகள் சில காணப்படுகின்றன. பல கற்திட்டைகள் சிதிலமடைந்துவிட்டன.

ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

போடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் முந்தல் கிராமத்துக்கு அருகே கீழச்சொக்கையா கோவில் உள்ளது. இந்த பகுதியில், 9 கல்திட்டைகள் உள்ளன. சிறிய அளவிலான கல் வீடு போன்ற அமைப்பில் காணப்படும் கல்லறை அமைப்புக்கு கல்திட்டை என்று பெயர். இதனை கற்திட்டை, ஈமப்புதைக்குழி என்றும் அழைப்பர். பெரிய கற்களைக் கொண்டு நீத்தோர் நினைவாக அமைக்கப்பட்டதால், இவ்வமைப்பு பெருங்கற்படை காலம் என்று அழைக்கப்படுகிறது.