முகப்பு தொல் பழங்காலம் பெருங்கற்காலம் பெருங்கற்காலப் புதிர்நிலை, வேம்படித்தாளம்
அமைவிடம் | - | வேம்படித்தாளம் |
ஊர் | - | வேம்படித்தாளம் |
வட்டம் | - | ஆத்தூர் |
மாவட்டம் | - | சேலம் |
வகை | - | புதிர்நிலை |
கிடைத்த தொல்பொருட்கள் | - | புதிர்நிலை கல்வட்டங்கள் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | 2016 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | சுகவனம் முருகன், விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் வெங்கடேசன் பொன் |
விளக்கம் | - | சேலம் மாவட்டம் வேம்படித்தாளம் கிராமத்தில், பழங்கால வட்ட புதிர்நிலை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய புதிர்நிலைகளில் வேம்படித்தாளம் ஒன்றாகும். பெரிய புதிர்நிலை வட்ட வடிவில் இருப்பதுடன், 15 மீ., வட்டம், 140 மீட்டர் சுற்றளவு என்ற அளவில், 700 சதுர அடி பரப்பில் உள்ளது. பெருங்கற்கால புதிர்நிலை குறித்து, பாறை ஓவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருங்கற்கால வட்டப் புதிர்நிலை ஒன்று, தெற்கு கோவா, உஸ்கலிமோல் பகுதியில் உள்ளது. ஏழு நிலைப் பாதைகளைக் கொண்டதாக பாறையில் கீறப்பட்டிருக்கும். பெருங்கற்கால மக்களின் பண்பாட்டை அறிவதில் அகழாய்வு மட்டுமின்றி, புதிர்நிலை பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. வட்ட புதிர்நிலைகள், சுருள்வழி புதிர்நிலைகள், சதுர மற்றும் செவ்வக புதிர்நிலைகளும் உள்ளன. பெருங்காலப் புதிர்நிலைகள், 2,000 ஆண்டு பழமையானதாகும். மகாபாரதத்தில் அபிமன்யு சிக்கிக்கொண்டு, உயிரிழந்த சக்கரவியூகம், இவ்வாறான புதிர் நிலையாகும். வட்ட புதிர்நிலை, கிருஷ்ணகிரி பகுதியில் உள்ளது. வேம்படித்தாளத்தில் கண்டறிந்த வட்டப் புதிர்நிலை, கம்பையநல்லூர் புதிர் நிலையை விட, 64 ச.மீ., பெரியதாகும். புதிர் நிலைகளில், அமாவாசை, பவுர்ணமி நாளில் வழிபடுகின்றனர். |
ஒளிப்படம்எடுத்தவர் | - | சுகவனமுருகன் |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிப்புதவிகள் | - |
|