அமைவிடம் | - | தொளுவபெட்டா |
ஊர் | - | தொளுவபெட்டா |
வட்டம் | - | தேன்கனிக்கோட்டை |
மாவட்டம் | - | கிருஷ்ணகிரி |
வகை | - | கற்காலக்கருவிகள் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கற்காலக்கருவிகள் |
பண்பாட்டுக் காலம் | - | புதிய கற்காலம் |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மத்தியத் தொல்லியல் துறை |
விளக்கம் | - | கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ள தொளுவபெட்டா ஒரு புதியகற்கால வாழிடமாகும். இங்கு புதிய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரிகள் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிய கற்காலம் என்பது கி.மு. 3000 - 1000 வரை நிலவியது. குறிப்பாக தமிழகத்தின் வட ஆர்க்காடு பகுதியிலுள்ள பையம்பள்ளியில் இப்புதிய கற்காலச் சின்னங்கள் அதிகம் காணப்படுகின்றன. புதிய கற்காலக் கருவிகளைப் பொறுத்தவரை வழவழப்பானவை. மெருகூட்டப்பட்டவை. சிறிய அளவில் ஆனவை. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | திரு.பரந்தாமன் |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
சுருக்கம் | - | கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொளுவபெட்டா என்னும் கிராமத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரிகள் உள்ளிட்ட கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கருவிகள் இங்குள்ள மக்களால் வழிபடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. |