அமைவிடம் | - | கொட்டையூர் |
ஊர் | - | கோட்டையூர் |
வட்டம் | - | அஞ்செட்டி (ஆஞ்செட்டி) |
மாவட்டம் | - | கிருஷ்ணகிரி |
வகை | - | கல்வட்டம் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்வட்டம் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மத்தியத் தொல்லியல் துறை |
விளக்கம் | - | கோட்டையூரில் காணப்படும் பெருங்கற்கால ஈமச்சின்னமான கல்வட்டங்கள் காலத்தால் மிகவும் பழமையானவை. கல்வட்டத்தில் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள கற்கள் ஒரு சீரற்ற நிலையில் காணப்படுகின்றன. இந்நிலையில் வைக்கப்படும் ஈமச்சின்னங்கள் காலத்தால் முந்தியவை என்று தொல்லியல் அறிஞர்களால் கூறப்படுகிறது. செம்மைப்படுத்தப்படாத நிலையில் கற்கள் வட்டமாக வைக்கப்பட்டுள்ளன. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | திரு.பரந்தாமன் |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
சுருக்கம் | - | கோட்டையூர் கிருட்டிணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இக்கிராமம் ஒரு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஊராகும். இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்களுள் ஒன்றான கல்வட்டங்கள் காணப்படுகின்றன. |