சீராப்பள்ளி

    அமைவிடம் - சீராப்பள்ளி
    ஊர் - சீராப்பள்ளி
    வட்டம் - இராசிபுரம்
    மாவட்டம் - நாமக்கல்
    வகை - நெடுங்கல்
    கிடைத்த தொல்பொருட்கள் - நெடுங்கல்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    கண்டறியப்பட்ட காலம் - 2016
    கண்டறிந்த நிறுவனம்/நபர் -

    ஆறகழூர் வெங்கடேசன் பொன்

    விளக்கம் -

    நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டத்தில் சீராப்பள்ளி என்னும் ஊரில் ஒரு நெடுங்கல் அமைந்துள்ளது.  பெருங்கற்காலத்தைச் சார்ந்த இந்த நெடுங்கல் தற்போது பீடத்தின் மீது நிறுத்தப்பட்டு வழிபாட்டில் உள்ளது. பண்டைய வழிபாட்டு முறையான நினைவுக்கல்லை வணங்கும் மரபு இன்றும் தொடர்வதற்கு சீராப்பள்ளி நெடுங்கல் சான்றாக விளங்குகிறது.

    ஒளிப்படம்எடுத்தவர் - ஆறகழூர் வெங்கடேசன் பொன்
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்