அமைவிடம் | - | பெருநகர் |
ஊர் | - | பெருநகர் |
வட்டம் | - | உத்தரமேரூர் |
மாவட்டம் | - | காஞ்சிபுரம் |
வகை | - | கல்வட்டம் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்வட்டங்கள், கருப்பு-சிவப்பு பானையோடுகள், இரும்புக் கசடுகள் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2010 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மதுரை கோ.சசிகலா |
விளக்கம் | - | காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெருநகர் ஊராட்சி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. பெருநகர் ஊராட்சியில் அமைந்துள்ள பெருநகர் என்னும் சிற்றூரின் வடகிழக்கே அமைந்துள்ள நிலப்பரப்பில் இங்கு கருப்பு-சிவப்பு பானையோடுகளும், உடைந்த தாழிகளின் வாய்ப்பகுதிகளும், கல்வட்டங்களும் காணப்படுகின்றன. இத்தொல்லியல் தரவுகள் தொல்லியல் ஆய்வாளர்கள் கோ.சசிகலா, திரு.பரந்தாமன் ஆகியோரின் மேற்பரப்பு களஆய்வின் போது கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இவ்வூர் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளதை இங்குள்ள தொல்லியல் ஈமச்சின்னங்கள் தெரிவிக்கின்றன. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | மதுரை கோ.சசிகலா |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | மதுரை கோ.சசிகலா |
சுருக்கம் | - | காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெருநகர் ஊராட்சி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரில் தொல்லியல் தரவுகள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வூர் 3000 ஆண்டுகால தொல்வரலாற்றைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. |