அமைவிடம் | - | லிங்கவாடி |
ஊர் | - | லிங்கவாடி |
வட்டம் | - | நத்தம் |
மாவட்டம் | - | திண்டுக்கல் |
வகை | - | கல்வட்டம் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்வட்டங்கள், கருப்பு, கருப்பு-சிவப்பு பானையோடுகள், நடுகல் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2013 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மதுரை கோ.சசிகலா |
விளக்கம் | - | இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் நாயக்க மன்னர் ஆட்சிக் காலத்தில் லிங்கம நாயக்கர் தலைமையில் திருச்சிக் கோட்டை வலுவாக்கப்பட்டது. லிங்கமநாயக்கர் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளின் அரசு பொறுப்பை ஏற்றிருந்தவர். அவரது பெயரிலேயே அமைந்த லிங்கவாடி என்னும் இவ்வூரில் நாயக்கர் கால நடுகற்கள் மாந்தோப்பில் காணக்கிடக்கின்றன. அவரது காலத்தில் இப்பகுதியில் சிறு சிறு போர்கள் ஏற்பட்டதென நாயக்கர் வரலாறு தெரிவிக்கின்றது. கல்வட்டங்கள், கருப்பு, கருப்பு-சிவப்பு பானையோடுகள், நடுகல் ஆகிய தொல்லியல் சின்னங்கள் இவ்வூரில் காணப்படுகின்றன. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | மதுரை கோ.சசிகலா |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டாரத் தொல்லியல் கள ஆய்வின் போது பல்வேறு இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. நத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல சிற்றூர்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களின் வகைகளான கல்வட்டங்களும், குத்துக்கற்களும் காணப்படுகின்றன. பெருங்கற்கால பண்பாட்டைச் சேர்ந்த பானையோடுகள் வேளாண்மை நிலப்பகுதிகளிலும், ஊரின் புறத்தேயுள்ள ஏரிக்கரையில் முதுமக்கள் தாழிகளின் உடைந்த எச்சங்களும் கிடைக்கின்றன. லிங்கவாடி போன்ற ஊர்களில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த நடுகற்கள் எழுத்தின்றி, உருவத்துடன் அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளன. மேற்பரப்பாய்வில் லிங்கம நாயக்கரின் பெயரில் அமைந்த ஊரான லிங்கவாடியில் கண்டறியப்பட்ட பண்பாட்டு எச்சங்கள் தமிழகத் தொல்லியல் கழகத்தின் வெளியீடான ஆவணம் என்னும் ஆண்டு இதழில் வெளியிடப்பட்டு ஆவணப்பபடுத்தப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. |