| அமைவிடம் | - | காரைமேட்டுப்பட்டி |
| ஊர் | - | காரைமேட்டுப்பட்டி |
| வட்டம் | - | இலுப்பூர் |
| மாவட்டம் | - | புதுக்கோட்டை |
| வகை | - | ஈமச்சின்னம் மற்றும் வாழ்விடப்பகுதி -தாழி, பானையோடுகள் |
| கிடைத்த தொல்பொருட்கள் | - | கருப்பு மற்றும் கருப்பு சிவப்பு நிற பானையோடுகள் |
| பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
| கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2014 |
| கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மதுரை கோ.சசிகலா |
| விளக்கம் | - | இராஜகிரி பஞ்சாயத்தைச் சேர்ந்த காரைமேட்டுப்பட்டி விராலிமலையிலிருந்து கிழக்கே 2கி.மீ. தொலைவில் உள்ள சீத்தக்காட்டுப்பட்டியிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் வடமேற்கில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பெருங்கற்கால வாழ்விடப்பகுதிக் காணப்படுகின்றது. மேலும் கருப்பு மற்றும் கருப்பு சிவப்பு நிற பானையோடுகள் காணப்படுகின்றன. இவ்வூரில் உள்ள மதியன்கோயில் பகுதி முழுவதும் பெருங்கற்கால வாழ்விடப்பகுதியாக அமைந்துள்ளது. |
| ஒளிப்படம்எடுத்தவர் | - | மதுரை கோ.சசிகலா |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| சுருக்கம் | - | காரைமேட்டுப்பட்டியில் பெருங்கற்கால வாழ்விடப்பகுதிக்கான மண்மேடு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மேற்பரப்பு களஆய்வில் வாழ்விடப்பகுதிக்கான தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. |