முகப்பு தொல் பழங்காலம் பெருங்கற்காலம் வடகாட்டுப்பட்டி தொல்லியல் களம், புதுக்கோட்டை மாவட்டம்.
அமைவிடம் | - | வடகாட்டுப்பட்டி |
ஊர் | - | வடகாட்டுப்பட்டி |
வட்டம் | - | இலுப்பூர் |
மாவட்டம் | - | புதுக்கோட்டை |
வகை | - | தாழி, பானையோடுகள் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | சிவப்பு நிற பானையோடுகள், சொரசொரப்பான காவிநிற பானையோடுகள், தாழிகள் |
பண்பாட்டுக் காலம் | - | மத்திய வரலாற்றுக்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2014 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மதுரை கோ.சசிகலா |
விளக்கம் | - | வடகாட்டுப்பட்டி விராலிமலையிலிருந்து தெற்கே மதுரை செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் மேற்குப்பகுதியில் உள்ள கண்மாயின் கிழக்குப்பகுதியில் இடைக்காலத்தைச் சேர்ந்த வாழ்விடப்பகுதிகள் காணப்படுகின்றன. சிவப்புநிற பானையோடுகளும், சொரசொரப்பான காவிநிற பானையோடுகளும் கிடைக்கின்றன. மேலும் கண்மாயின் வடக்குப்பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த தாழி வகைகள் முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | மதுரை கோ.சசிகலா |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | வடகாட்டுப்பட்டி ஊர் பெருங்கற்காலத்திலிருந்து தொடர்ச்சியான பண்பாட்டைக் கொண்டிருந்தாலும் மேற்பரப்பு களஆய்வில் வரலாற்று இடைக்காலத்தைச் சேர்ந்த அதாவது கி.பி.4-7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானையோடுகள் கிடைக்கின்றன. |