அமைவிடம் | - | ஆமூர் |
ஊர் | - | ஆமூர் |
வட்டம் | - | செங்கல்பட்டு |
மாவட்டம் | - | செங்கல்பட்டு |
வகை | - | கல்வட்டம் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்வட்டங்கள் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மத்தியத் தொல்லியல் துறை |
விளக்கம் | - | செங்கற்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள ஆமூர் கல்வட்டங்கள் கருங்கற்களால் ஆனவை. இவ்வூரின் ஈமக்காட்டுப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் விரவி கிடைக்கின்றன. இந்த கல்வட்டங்களின் நடுவில் தாழிகள் வைக்கப்பட்டு பண்டையோர் உடல்கள் புதைக்கப்பட்டன. ஆமூர் ஈமக்காட்டில் காணப்படுகின்ற இந்த பெருங்கற்காலப் பண்பாட்டு கல்வட்டங்கள் ஒன்றுக்கொன்று அளவில் வேறுபடுகின்றன. சிறிய அளவிலும், பெரியதாகவும் வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | திரு.வேலுதரன் |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
சுருக்கம் | - | செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆமூர் என்னும் ஊர் மிகவும் பழமை வாய்ந்த ஊராகும். இவ்வூரில் பெருங்கற்காலப் பண்பாட்டு சின்னங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. குறிப்பாக கல்வட்டங்கள் வட்ட வடிவில் உள்ளன. இந்த கல்வட்டங்கள் யாவும் கருங்கற்களால் ஆனவை. |