அமைவிடம் | - | பேளூர் |
ஊர் | - | கல்வராயன் மலை |
வட்டம் | - | கல்வராயன் மலை |
மாவட்டம் | - | கள்ளக்குறிச்சி |
வகை | - | குத்துக்கல்/கல்வட்டங்கள் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்வட்டங்கள், குத்துக்கல் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மத்தியத் தொல்லியல் துறை |
விளக்கம் | - | பேளூர் பகுதியில் ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் காணப்படுகின்றன. நடுகற்கள், குத்துக்கற்கள், கல்வட்டங்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன. இங்கு பெரும் பரப்பளவில் இருந்திருந்த பெருங்கற்காலப் பண்பாடானது சிதைந்த நிலையில் காணப்படுகிறது. பலகைக் கல்வெட்டுகள் ஆங்காங்கே நிலப்பரப்பில் ஊன்றப்பட்டு வழிபாட்டில் உள்ளது. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | திரு.வேலுதரன் |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
சுருக்கம் | - | கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலைப்பகுதியில் அமைந்துள்ளபேளூர் என்னும் ஊரில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. கற்குவியல், குத்துக்கல் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இங்கு காணப்படுகின்ற குத்துக்கல் ஒன்று வழிபாட்டில் உள்ளது. |