மரச்சிற்பங்கள்

          சிற்பங்கள் பண்டைய காலத்தில் மரத்தினால் செய்யப்பட்டு வழிபடப்பட்டன. மரத்தினால் தெய்வ உருவினை வடித்து வணங்குதல் தொல் மரபாகும். மரமே தெய்வமாக வணங்கப்படும் சமூகத்தில் மரத்தினால் சமைக்கப்பட்ட தெய்வ உரு உயர்வானதாகக் கருதப்பட்டது. சங்க காலத்தில் மரச்சிற்பங்கள் மாளிகைகளில் இருந்தமை குறிப்பிடப்படுகின்றது. மரச்சிற்பங்கள் முழு உருவத்தில் தனிச்சிற்பங்களாகவும், மரப்பலகையில் புடைப்புச் சிற்பங்களாகவும் செதுக்கி வடிக்கப்படும். அத்தி, தேவதாரு போன்ற மரங்கள் தெய்வ வடிவங்கள் செய்வதற்கு பொதுவாக பயன்படுகின்றன. மரச்சிற்பங்கள் தெய்வ உருவங்களாகவும், புராணக் காட்சிகளாகவும் வடிக்கப்பட்டு தேர்களில் பொருத்தப்படுகின்றன. மரச்சிற்பங்கள் அதிக அளவினவாக தேர்ச்சிற்பங்களா...


மேலும் படிக்க